கொரோனாவின் கோரப்பிடியில் இத்தாலியில் ஒரே நாளில் 743 பேர் பலி - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 25, 2020

கொரோனாவின் கோரப்பிடியில் இத்தாலியில் ஒரே நாளில் 743 பேர் பலி

இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 743 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 196 நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இதற்கிடையே, சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது ஐரோப்பிய நாடுகளில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. குறிப்பாக இத்தாலியை இந்த வைரஸ் புரட்டி எடுத்து வருகிறது. 

இத்தாலியில் இதுவரை 69 ஆயிரத்து 176 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. இந்நிலையில், கொரோனாவுக்கு அந்நாட்டில் நேற்று ஒரே நாளில் 743 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதனால் இத்தாலியில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆயிரத்து 820 ஆக அதிகரித்துள்ளது.

No comments:

Post a Comment