இலங்கை நாட்டின் 72 ஆவது சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் வகையில் உங்கள் ஒவ்வொருவரின் வீடுகளிலும் ஒரு மரக்கன்று அல்லது ஒரு செடி அல்லது ஒரு கொடியையேனும் நட்டு பசுமை மிக்க பூமியை உருவாக்க உங்களது பங்களிப்பினை வழங்குங்கள்.
நாம் நடும் ஒவ்வொரு மரமும் நமது அடுத்த தலைமுறைக்காய் நாம் செய்யும் மிகப்பெரும் உதவியாக அமையும். தாய்த்திருநாட்டின் சுதந்திர தினத்தில் Green Era உடன் இணைந்து பாரிய பசுமை புரட்சியிற்கு நீங்களும் வித்திடுங்கள்.
நீங்கள் உங்களது வீட்டில் அன்றைய நாளில் மரம்/செடி அல்லது கொடியினை நடுகின்ற போது அதனை ஒரு புகைப்படமாக எடுத்து உங்களுடைய முகநூல் பக்கத்தில் Green Era (பசுமை சகாப்தம்) என #Hashtag செய்து பதிவிடுங்கள்.
இந்த உலகிற்கு மிகப்பெரும் செய்தியை கிழக்கு வாழ் மக்களாகிய நாம் சொல்வோம். எம் தாய்த்திருநாட்டின் சுதந்திரதினத்தில்.
இந்த உலகிற்கு மிகப்பெரும் செய்தியை கிழக்கு வாழ் மக்களாகிய நாம் சொல்வோம். எம் தாய்த்திருநாட்டின் சுதந்திரதினத்தில்.
MHM.Azeem
Founder /President
Green Era-Sri Lanka
No comments:
Post a Comment