அறுகம்பே சபாத் இல்ல விடயத்தில் நடவடிக்கை எடுப்பதற்கு முஸ்தீபு : தவிசாளர் முஸர்ரப் தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, August 14, 2025

அறுகம்பே சபாத் இல்ல விடயத்தில் நடவடிக்கை எடுப்பதற்கு முஸ்தீபு : தவிசாளர் முஸர்ரப் தெரிவிப்பு

அறு­கம்பே பகு­தியில் இயங்கும் சபாத் இல்லம் தொடர்பில் பொத்துவில் பிர­தேச சபை ஊடாக முன்­னெ­டுக்க வேண்­டிய சட்ட ரீதி­யான நட­வ­டி­க்கைகள் முனைப்­புடன் செயற்­பட்டு வரு­வ­தாக பிரதேச சபை தவி­சாளர் எஸ்.எம்.எம்.முஸர்ரப் தெரி­வித்தார். 

பொத்­துவில் பிர­தேச சபை அமர்வில் சட்­ட­வி­ரோ­த­மாக இயங்கும் சபாத் இல்­லத்தை மூடு­வ­தென தீர்­மானம் எடுக்­கப்­பட்­ட­தாகவும் அவர் தெரி­வித்தார்.

இது­ கு­றித்து அவர் மேலும் தெரி­விக்­கையில், பிர­தேச ஒருங்கிணைப்புக் கூட்­டத்­திலும் கூட இவ்­வா­றான சபாத் இல்லங்களை மூடு­வது தொடர்­பான தீர்­மானம் எடுக்­கப்­பட்­டது. கடந்த ஜூலை மாத­ம­ளவில் இது குறித்து ஆரா­யப்­பட்­டது. அதனை அவ­ச­ர­மாக முன்­னெ­டுப்­ப­தற்­கான அழுத்­தங்­களை நாம் பிரயோகித்து வரு­கின்றோம்.

இத­னி­டையே, ஏற்­க­னவே, வெளி­நாட்டு அமைச்­சி­னு­டைய வெளிநாடு­க­ளுக்­கான பணிப்­பாளர் நாய­கத்தின் தலை­மையில் நடை­பெற்ற நிகழ்­நிலை கலந்­து­ரை­யா­ட­லின்­போது பொத்­துவில் பிரதேச செய­லாளர், அம்­பாறை மாவட்ட அர­சாங்க அதிபர், பொலிஸ் திணைக்­கள அதி­கா­ரிகள், புல­னாய்­வுத்­துறை அதி­கா­ரிகள் அனைவரும் சட்­ட­வி­ரோ­த­மாக இயங்கும் சபாத் இல்லம் பற்றி கலந்துரை­யா­டப்­பட்­டது.

சட்­ட­வி­ரோ­த­மாக இயங்கும் சபாத் இல்லம், பொத்­து­விலில் மாத்திரமல்ல கொழும்பு, எல்ல, வெலி­கம போன்ற இடங்­களில் இயங்கு­வ­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டது. குறிப்­பாக இந்த சட்­ட­வி­ரோத சபாத் இல்லம் ஒரு நபரின் பெயரில் கம்­பனிச் சட்­டத்தின் கீழ் பதிவு செய்­யப்­பட்டு இயங்­கு­வ­தா­கவும் கலந்­து­ரை­யா­ட­லின்­போது வெளிவிவ­கார அமைச்சின் அதி­கா­ரிக்கள் தெரி­வித்­தனர்.

ஆனால், இது ஒரு வழி­பாட்டுத்தல­மாக இருந்தால் கலா­சார அமைச்சின் கீழ் பதிவு செய்­யப்­பட்­டி­ருக்க வேண்டும். அவ்­வாறு கலாசார அமைச்சின் கீழ் பதிவு செய்­யப்­ப­ட­வில்லை. எனவே கம்பனிச் சட்­டத்தின் கீழ் பதிவு செய்­யப்­பட்ட நிறு­வ­னத்தின் கீழ் மத வழி­பாட்­டுத்­தலம் இயங்க முடி­யா­தெ­னவும் ஆகவே, இந்த சபாத் இல்லம் சட்­ட­வி­ரோ­த­மா­ன­தெ­னவும் தெரி­விக்­கப்­பட்­டது.

வெளி­நா­டு­க­ளுக்­கான பணிப்­பாளர் நாய­கத்தின் தலை­மையில் நடை­பெற்ற நிகழ்­நிலை கலந்­து­ரை­யா­ட­லின்­போது சட்­ட­வி­ரோ­த­மாக இயங்கும் சபாத் இல்­லத்தை மூடு­வ­தென முடி­வெ­டுக்­கப்­பட்­டது. ஆனால் இலங்­கையில் தற்­போது பேசு பொரு­ளாக பொத்­துவில் அறுகம்­பேயில் இயங்கும் சட்­ட­வி­ரோத சபாத் இல்­லமே உள்­ளது.

பொத்­துவில் பிர­தேச சபை அதி­கா­ரத்­திற்கு உட்­பட்ட வகையில் எம்மால் முன்­னெ­டுக்க முடி­யு­மான நட­வ­டிக்­கை­களை நாம் முனைப்புடன் மேற்­கொண்டு வரு­கின்றோம். பெத்­துவில் பிர­தேச சபை அதி­கா­ரி­க­ளுடன் இது தொடர்பில் நேற்றுமுன்­தினம் (12) சந்தித்து கலந்­து­ரை­யா­ட­லொன்றை நடத்­தி­யி­ருந்தேன்.

இதன்­போது, அறுகம்­பேயில் இயங்கிவரும் சபாத் இல்லம் அல்­லது அவர்கள் தங்கும் இடங்கள் குறித்­த ஆவ­ணங்கள் மற்றும் சட்ட ரீதியிலான அங்­கீ­காரங்கள் தொடர்பில் பரி­சீ­லிக்­கு­மாறு வேண்டியிருக்­கிறேன். ஓரிரு தினங்களில் இந்த கோப்பு தயாராகும். அதன் பின்னர், எமது அதிகாரத்திற்குள் நாம் எந்த நடவடிக்கை எடுக்க முடியுமோ அதனை மேற்கொள்ள நாம் பின்நிற்கப்போவதில்லை. 

அத்துடன், எமது அதிகாரத்திற்கு அப்பால் உள்ள விடயங்களில் நடவடிக்கை எடுப்பதற்கான அழுத்தங்களையும் நாம் பிரயோகிக்கவுள்ளோம் என்றார்.

Vidivelli

No comments:

Post a Comment