சமூக வலைத்தளத்தில் உலமா சபை மீது அவதூறு : நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு - News View

About Us

About Us

Breaking

Thursday, August 14, 2025

சமூக வலைத்தளத்தில் உலமா சபை மீது அவதூறு : நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு

அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா மற்றும் அதன் நிர்­வாக உறுப்­பி­னர்­களை குறி­வைத்து அப்துல் சத்தார் முஹம்மத் இஸ்மத் என்­பவர் வெளி­யிட்­ட­தாகக் கூறப்­படும் அவ­தூ­றான, தீங்­கி­ழைக்கும் யூடியூப் பதி­வு­களை உட­ன­டி­யாக நீக்­கு­மாறும் அவரை ஆகஸ்ட் 21 ஆம் திகதி நீதி­மன்­றத்தில் ஆஜ­ரா­கு­மாறும் கொழும்பு முதன்மை நீதிவான் தனுஜா லக்­மாலி கடந்த வாரம் உத்­த­ரவு பிறப்­பித்­துள்ளார்.

இந்த உத்­த­ரவு 2024ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க இணைய பாது­காப்புச் சட்­டத்தின் 24வது பிரிவின் கீழ் உலமா சபை தாக்கல் செய்த மனுவுக்கி­ணங்க வழங்­கப்­பட்­டது.

இந்த சட்­டத்தின் கீழ், பாதிக்­கப்­பட்ட எந்­த­வொரு தரப்­பி­னரும் இணை­யத்தில் பரப்­பப்­படும் தடை­ செய்­யப்­பட்ட அல்­லது தீங்கு விளை­விக்கும் உள்­ள­டக்­கங்­க­ளுக்கு எதி­ராக நீதி­மன்ற தடுப்பு உத்தரவை கோர முடியும்.

அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மாவின் சார்பில் ஆஜ­ரான சட்டத்­த­ரணி சிந்­தக ரண்­கொத்‌கே மத ­ரீ­தி­யான விரோதம், சமூக மற்றும் மத நிறு­வ­னங்கள் மீது அவ­தூ­று­க­ளையும் சமூ­கத்­துக்கு தீங்கான பதி­வு­க­ளையும் குறிப்­பிடும் சமூக வலைத்­த­ளங்­களின் தவறான பயன்­பாட்டை சட்­ட­மு­றை­மையில் எதிர்­கொள்­வ­தற்கு அகில இலங்கை ஜம்­மி­யத்துல் உலமா நிறை­வேற்று குழு தீர்மானித்துள்­ளது என நீதி­மன்­றத்தில் தெரி­வித்தார்.

இது நீதி மற்றும் சட்டப் பிரி­வு­களைப் பேணி மேற்­கொள்­ளப்­பட வேண்டும் எனவும் அவர் வலி­யு­றுத்­தினார்.

2025 ஆம் ஆண்டு ஜூலை 16 முதல் ஆகஸ்ட் 2 வரை இஸ்மத் வெளியிட்ட வீடியோக்கள் மற்றும் பதி­வுகள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அதன் நிறை­வேற்­றுக்­குழு உறுப்­பி­னர்கள் மற்றும் சமூக, மதச் செயல்­பா­டு­களை குறி­வைத்து பகைமை மற்றும் அவப்­பெ­யரை உருவாக்கும் நோக்­கத்­துடன் வெளி­யி­டப்­பட்­டுள்­ளதாக குற்றஞ்சாட்டப்­பட்­டது.

சமர்ப்­பிக்­கப்­பட்ட ஆதா­ரங்­களை பரி­சீ­லித்த நீதி­மன்றம் இணைய பாது­காப்புச் சட்­டத்தின் 24(2) பிரிவின் கீழ் சந்­தே­க­நபர் உட­ன­டி­யாக அவ­தூ­றான உள்­ள­டக்­கங்­களை அகற்ற வேண்டும் என்றும் 2025 ஆகஸ்ட் 21 அன்று தனிப்­பட்ட முறையில் நீதி­மன்­றத்தில் ஆஜ­ராகி உத்­த­ர­வுக்கு அமைய நட­வ­டிக்கை எடுத்­ததை உறு­திப்­ப­டுத்தி, ஏன் தன்மீது சட்ட நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ளக் கூடா­தென்­பதை விளக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இந்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணை 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21 அன்று நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Vidivelli

No comments:

Post a Comment