பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக இன்று (28) அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறியதன் காரணமாக பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்த நிலையிலும் நாமல் ராஜபக்ஸ மாலைத்தீவுக்கு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனால் அவரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துமாறு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
No comments:
Post a Comment