வாக்குமூலம் வழங்கிய பின் CID யிலிருந்து வெளியேறினார் ரணில் - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 11, 2025

வாக்குமூலம் வழங்கிய பின் CID யிலிருந்து வெளியேறினார் ரணில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கிய பின் அங்கிருந்து வெளியேறினார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (11) பிற்பகல் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரம் தொடர்பிலேயே முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

ஹியுமன் இமியூனோகுளோபியூலின் தடுப்பூசியை கொள்வனவு செய்வதற்காக முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரம் தொடர்பிலேயே முன்னாள் ஜனாதிபதியிடம் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இன்று (11) பிற்பகல் 3.30 க்கு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு சென்ற முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் சுமார் ஒரு மணித்தியால வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

தரமற்ற ஹியுமன் இமியூனோகுளோபியூலின் உள்ளிட்ட மருந்துகளை அவசர கொள்வனவு நடைமுறையின் கீழ் கொள்வனவு செய்வதற்காக 2022 செப்டம்பர் 25ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதியிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

நாட்டில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் நிலைமை மிகவும் மோசமடைவதால் அதற்கு முன்னர் ஒரு தொகை மருந்துகளை கொள்வனவு செய்ய வேண்டும் எனவும் கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராக சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனிடையே, கெஹெலிய ரம்புக்வெல்லவின் வீட்டில் பணிபுரிந்த பெண்ணொருவர் இன்று (11) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுகாதார அமைச்சுக்கான பெயரளவிலான நியமனங்கள் மூலம் அரச சம்பளம் மற்றும் மேலதிக நேர கொடுப்பனவுகளை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பிலான விசாரணைகளுக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment