(எம்.மனோசித்ரா)
இலங்கை மின்சார சபையின் புதிய தலைவராக பேராசிரியர் கே.டி.எம். உதயங்க ஹேமபால நியமிக்கப்பட்டுள்ளார்.
பேராசிரியர் ஹேமபால இலங்கை வலுசக்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் ஆவார். அந்த நியமனத்திற்கு முன்பு, அவர் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் மின் பொறியியல் துறையின் பேராசிரியராகவும், பொறியியல் பீடத்தின் பீடாதிபதியாகவும் பணியாற்றியுள்ளார்.
மின்சார சபையின் தலைவராக பணியாற்றிய டி.ஜே.டி. சியம்பலாபிட்டியவின் இராஜிநாமா உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
சியம்பலாபிட்டிய கடந்த மே மாதம் 11ஆம் திகதி அன்று இலங்கை மின்சார சபையின் தலைவர் பதவியை இராஜினாமா செய்தார். அவர் கடந்த ஆண்டு செப்டெம்பர் 26ஆம் திகதி மின்சார சபை தலைவராக நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment