முன்னாள் அமைச்சர் துமிந்தவிற்கு விளக்கமறியல் நீடிப்பு : பயங்கரவாத விசாரணைப் பிரிவு தீவிர விசாரணை - News View

About Us

About Us

Breaking

Thursday, June 26, 2025

முன்னாள் அமைச்சர் துமிந்தவிற்கு விளக்கமறியல் நீடிப்பு : பயங்கரவாத விசாரணைப் பிரிவு தீவிர விசாரணை

அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்ட தங்க முலாமிடப்பட்ட T-56 துப்பாக்கி தொடர்பான வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவிற்கு ஜூலை மாதம் 07ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கல்கிஸ்ஸை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று (26) காலை அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய மூன்றாவது சந்தேகநபரை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த மே மாதம் 20ஆம் திகதி தெஹிவளை - கல்கிஸ்ஸை அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பெண் ஒருவரின் பயணப்பையில் இருந்து தங்க முலாமிடப்பட்ட T-56 துப்பாக்கியொன்று கண்டுபிடிக்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து மே மாதம் 23ஆம் திகதியன்று சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட துமிந்த திசாநாயக்க, மே மாதம் 24ஆம் திகதி முதல் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அதற்கமைய இச்சம்பவம் தொடர்பில் கைதான துமிந்த திசாநாயக்க மற்றும் இரு பெண்களுக்கு இவ்வாறு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த துப்பாக்கியின் உரிமை தொடர்பான விசாரணையை பயங்கரவாத விசாரணைப் பிரிவு (TID) மேற்கொண்டு வருகின்றது.

No comments:

Post a Comment