பதுளை - துன்ஹிந்த வீதியில் கவிழ்ந்த பஸ் : மூவர் பலி, பலர் காயம் - News View

About Us

About Us

Breaking

Saturday, June 21, 2025

பதுளை - துன்ஹிந்த வீதியில் கவிழ்ந்த பஸ் : மூவர் பலி, பலர் காயம்

பதுளை - மஹியங்கனை பிரதான வீதியில் துன்ஹிந்த 4ஆவது மைல்கல் பகுதியில் இன்று (21) பிற்பகல் பேருந்து ஒன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன், 34 பேர் காயமடைந்துள்ளனர்.

விபத்துக்குள்ளான பேருந்து பதுளையிலிருந்து அனுராதபுரத்திற்கு யாத்ரீகர்கள் குழுவை ஏற்றிச் சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள் தம்புத்தேகம பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இன்று மாலை 6.00 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்துக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.

இவ்விபத்தின் காரணமாக  குறித்த பேருந்தில் பயணித்த 34 பேர் படுகாயங்களுக்கு உள்ளாகி பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் மூவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு பொறுப்பான வைத்தியர் பாலித்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இவ்விபத்து குறித்து பதுளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.  

பேருந்தை செலுத்திய சாரதியினால் பேருந்தின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனமையே விபத்து ஏற்பட காரணமாக இருக்கலாம் என பொலிஸார் ஆரம்பகட்ட விசாரணைகளின் பின்னர் சந்தேகம் வெளியிட்டுருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment