ஈரானிலிருந்து 1,428 இந்தியர்கள் தாயகம் திரும்பினர் : மேலும் 800 பேர் நாடு திரும்ப விருப்பம் - News View

About Us

About Us

Breaking

Monday, June 23, 2025

ஈரானிலிருந்து 1,428 இந்தியர்கள் தாயகம் திரும்பினர் : மேலும் 800 பேர் நாடு திரும்ப விருப்பம்

ஈ​ரானிலிருந்து 1,428 இந்​தி​யர்​கள் தாயகம் திரும்​பினர். மேலும் 800 பேர் நாடு திரும்ப விருப்​பம் தெரி​வித்​துள்​ளனர். இஸ்​ரேல், ஈரான் இடையே கடந்த ஒரு வாரத்​துக்​கும் மேலாக போர் நடை​பெற்று வரு​கிறது. இதையடுத்​து, ஆபரேஷன் சிந்து திட்​டத்​தின் மூலம் ஈரானில் உள்ள இந்​தி​யர்​கள் அழைத்து வரப்​படு​கின்​றனர்.

இதற்​கான ஏற்​பாடு​களை ஈரானில் உள்ள இந்​திய தூதரக​மும் மத்​திய வெளி​யுறவு அமைச்​சக​மும் செய்து வரு​கிறது. இது​வரை 4 தனி விமானங்​களில் மாணவர்​கள் உட்பட 1,100 பேர் தாயகம் திரும்பி உள்​ளனர். இந்​நிலை​யில், 300 இற்கும் மேற்​பட்​ட​வர்​களு​டன் 5-ஆவது விமானம் நேற்று (22) மாலை டெல்லி இந்​திரா காந்தி சர்​வ​தேச விமான நிலை​யம் வந்​தடைந்​தது.

இதன்​மூலம் இது​வரை ஈரானிலிருந்து அழைத்து வரப்​பட்​ட​வர்​கள் எண்​ணிக்கை 1,428-ஆக அதிகரித்துள்ளது. மேலும் 800 பேர் நாடு திரும்ப விருப்​பம் தெரி​வித்​துள்​ளனர். அவர்​கள் இன்​றும், நாளை​யும் தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ள​தாக மத்​திய அரசு வட்​டாரங்​கள் தெரி​வித்​துள்​ளன. இதுத​விர, நேபாளம் மற்​றும் இலங்​கை​யைச் சேர்ந்​தவர்​களை​யும் ஈரானிலிருந்து அழைத்​துவர தேவை​யான உதவி​கள் செய்​யப்​படும் என இந்​திய அரசு தெரி​வித்​துள்​ளது.

டெஹ்​ரானில் சிக்​கி​யிருந்த இந்​தி​யர்​கள் முதலில் 150 கி.மீ. தொலை​வில் உள்ள குவாம் நகருக்கு தரை மார்​க்க​மாக அழைத்து செல்​லப்​பட்​டனர். பின்​னர் அங்​கிருந்து 300 கி.மீ. தொலை​வில் உள்ள மஷாத் நகருக்கு அழைத்து செல்​லப்​பட்டு அங்​கிருந்து விமானத்​தில் அழைத்து வரப்​பட்​டனர். இஸ்​ரேலுட​னான போர் காரண​மாக வான்​வழி மூடப்​பட்​டிருந்​தா​லும், இந்​தி​யர்​கள் வெளி​யேற வசதி​யாக சிறிது நேரம் வான்​வழியை ஈரான் திறந்து விட்​டது.

இதனிடையே இந்​திய தேசி​யக் கொடியை ஏந்​தி​யபடி விமானத்​தில் டெல்லி வந்​தடைந்த மிஸ்​பன் கூறும்​போது, “ஈரானில் ஆங்​காங்கே சடலங்​களை பார்த்​தோம். வெடி சத்​தங்​களை கேட்​டோம். வான் வழி தாக்​குதலை கண்​டோம்’’ என்​றார். காஷ்மீரைச் சேர்ந்த மாணவர் சுமரா ரஹ்​மான் கூறும்​போது, ‘‘நாங்​கள் பயந்து போயிருந்​தோம். இரவு​கள் சைரன்​களாலும், குண்டு வெடிப்​பு​களாலும் நிறைந்​திருந்​தன. ஆனால் இப்​போது நாங்​கள் வீடு திரும்​பி​விட்​டோம். இறைவன் விரும்​பி​னால், எங்​கள் படிப்பை முடிக்க பாது​காப்​பான நேரம் கிடைக்​கும்​போது நாங்​கள்​ அங்​கு திரும்​பிச்​ செல்​வோம்​” என்​றார்​.

No comments:

Post a Comment