சுமார் 10 கிலோ கிராம் போதைப் பொருளுடன் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட சுமார் 51 கோடி ரூபா மதிப்பலான 10 கிலோ கிராம் கொக்கைன் போதைப் பொருளுடன் வெளிநாட்டுப் பிரஜை ஒருவரை போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் குழு இன்று (30) கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 38 வயதுடைய தாய்லாந்து நாட்டை சேரந்தவராவார்.
இன்று (05) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில், போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் மற்றும் விமான நிலைய சுங்க அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட சோதனையின்போது, 3 டெடி பியர் (Teddy Bear) பொம்மைகளுக்குள் இருந்து சுமார் 10 கிலோ 323 கிராம் கொக்கைன் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment