சிக்கி தவித்த மூன்று 3 மீனவர்கள் பாதுகாப்பாக மீட்பு : கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை - News View

About Us

About Us

Breaking

Friday, May 30, 2025

சிக்கி தவித்த மூன்று 3 மீனவர்கள் பாதுகாப்பாக மீட்பு : கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

பலப்பிட்டி கடற்கரையில் கடல் கொந்தளிப்பு காரணமாக ஆபத்தை எதிர்கொண்ட டிங்கி படகில் இருந்த 3 மீனவர்களை இலங்கை விமானப்படை (SLAF) மீட்டுள்ளது.

ரத்மலானவில் உள்ள விமானப்படை தளத்திலிருந்து பெல் 412 ஹெலிகொப்டர் மீட்புப் பணிக்காக அனுப்பப்பட்டதாக விமானப்படை தெரிவித்துள்ளது.

குறித்த மீனவர்கள் மூவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக விமானப்படை தெரிவித்துள்ளது.

பாதுகாப்புச் செயலாளரின் உத்தரவிற்கமைய மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடல் கொந்தளிப்பு மற்றும் பலத்த காற்று காரணமாக கடற்படை மற்றும் மீனவ சமூகங்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

No comments:

Post a Comment