ஒரு பில்லியன் ரூபா பெறுமதியான மருந்து மாத்திரைகளை சட்டவிரோதமாக வைத்திருந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக, நேற்று (01) இரவு கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, நீர்கொழும்பு - கொழும்பு பிரதான வீதி கொப்பறா சந்தியில் வைத்து வேன் ஒன்றை சோதனைக்கு உட்படுத்தியபோது இந்த மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த வேனில் அனுமதிப்பத்திரம் இன்றி வைத்திருந்த 5 இலட்சம் மாத்திரைகள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
இந்த மாத்திரைகள் சட்டவிரோதமான வகையில் இந்தியாவிலிருந்து படகு ஒன்றின் மூலம் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரிய வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த மாத்திரைகள், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம், சந்தேகநபரின் கையடக்க தொலைபேசி என்பனவற்றையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
கைதான 30 வயதான சந்தேகநபர் மன்னார் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றவியல் விசாரணைப் பிரிவு முன்னெடுத்துள்ளது.
No comments:
Post a Comment