இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட OnmaxDT பிரமிட் தளத்தை உருவாக்கியவர் : சர்வதேச சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்ட நபர் - News View

About Us

About Us

Breaking

Friday, February 21, 2025

இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட OnmaxDT பிரமிட் தளத்தை உருவாக்கியவர் : சர்வதேச சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்ட நபர்

OnmaxDT பிரமிட் நிதி மோசடி தொடர்பான முக்கிய சந்தேகநபராக அறியப்படும் கயான் விக்ரமதிலக எனும் சந்தேகநபர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் துபாயில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்றையதினம் (21) நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார்.

சந்தேகநபர் சட்டவிரோத பிரமிட் திட்டங்களை முன்னெடுத்த, இலங்கை மத்திய வங்கியினால் தடை செய்யப்பட்ட நிறுவனமாக அறிவிக்கப்பட்ட OnmaxDT எனும் கணனி தரவுத்தளத்தை உருவாக்கியமை மற்றும் அதனை பிரபலப்படுத்தியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

சந்தேகநபருக்கு எதிராக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், 2023ஆம் ஆண்டு வெளிநாடு சென்றிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, கொட்டாவ பகுதியைச் சேர்ந்த மென்பொருள் பொறியியலாளரான 33 வயதான குறித்த நபருக்கு எதிராக சர்வதேச பொலிஸாரின் மூலம், சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment