நாளையதினம் (11) மின் வெட்டு அமுல்படுத்தப்படும் அட்டவணையை தற்போது இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் நேற்றையதினம் (09) ஏற்பட்ட மின்சாரத் தடை காரணமாக, நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் 3 மின்பிறப்பாக்கி தொகுதிகளின் செயற்பாடு இடம்பெறாமை காரணமாக, நாடு முழுவதும் இன்றும் (10) நாளையும் (11) பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 9.30 மணிக்கு இடையில் நாடு முழுவதும் 20 வலயங்களாகப் பிரித்து 4 கட்டங்களில் மின்வெட்டை அமுல்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, இன்றையதினம் மின் வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான கால அட்டவணையை இலங்கை மின்சார சபை ஏற்கனவே வெளியிட்டதற்கு அமைய, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அதற்கு அனுமதி வழங்கியிருந்தது.
அந்த வகையில் நாளையதினம் (11) அமுல்படுத்தப்படவுள்ள மின் வெட்டு அட்டவணையை தற்போது PUCSL வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் நேற்றையதினம் (09) ஏற்பட்ட மின்சாரத் தடை காரணமாக, நுரைச்சோலை நிலக்கரி மின் நிலையத்தின் 3 மின்பிறப்பாக்கி தொகுதிகளும் செயற்பாட்டை நிறுத்தியிருந்தது.
குறித்த நிலக்கரி மின் நிலையமானது, பாரிய குளிர்விக்கும் தொகுதிகளை கொண்டுள்ளதோடு, இவ்வாறு மின் பிறப்பாக்கியின் இயக்கம் நிறுத்தப்படும்போது அத்தொகுதியின் இயக்கமும் தன்னியக்கமாக நின்று விடுகின்றது.
குறித்த குளிர்விக்கும் தொகுதியானது மீண்டும் இயங்க, முழுமையாக இயற்கையாக குளிர்வடைய வேண்டும் என்பதுடன், இதற்கு 2-3 நாட்கள் வரையான கால அவகாசம் அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக, நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் 3 மின்பிறப்பாக்கிகளும் வழங்கும் 900MW (300MW x 3) மின்சார விநியோகம் தேசிய மின்கட்டமைப்புக்கு கிடைக்காத நிலையில், இவ்வாறு மின்வெட்டை அமுல்படுத்த நேரிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment