அமெரிக்காவின் ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்க உள்ள நிலையில், அந்நாட்டில் Tik Tok செயலி மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களை மேற்கோள்காட்டி சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான Tik Tok செயலியை 270 நாட்களுக்குள் விற்பனை செய்வதற்கு அவகாசம் வழங்கும் சட்டத்தை கடந்தாண்டு ஏப்ரல் மாதம் இயற்றினார்.
அவ்வாறு விற்பனை செய்யாவிட்டால் ஆப்பிள் மற்றும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து Tik Tok செயலியை அகற்ற உத்தரவிடப்படும் என அந்தச் சட்டத்தில் கூறப்பட்டிருந்தது.
அமெரிக்காவில் Tik Tok செயலிக்கு கிட்டத்தட்ட 17 கோடி கணக்குகள் உள்ள நிலையில் நேற்று (19) முதல் தடை அமலுக்கு வந்துள்ளது.
இதனையடுத்து தற்காலிகமாக Tik Tok செயலியின் சேவையை நிறுத்துவதாக அந்நிறுவனம் அறிவித்தது. இதனிடையே Apple ஐ ஸ்டோர், Google Play Store இலிருந்து Tik Tok நீக்கம் செய்யப்பட்டது.
ஆனால் அமலுக்கு வந்த சில மணி நேரங்களிலேயே அமெரிக்காவில் மீண்டும் Tik Tok செயலி மீண்டும் செயல்பட தொடங்கியது.
அமெரிக்க ஜனாதிபதியாக இன்று (20) பதவியேற்கவுள்ள டொனால்ட் ட்ரம்ப், Tik Tok செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக அளித்துள்ள உறுதியைத் தொடர்ந்து மீண்டும் சேவையைத் தொடங்குவதாக அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
No comments:
Post a Comment