தொப்புள் கொடியுடன் சடலமாக மீட்கப்பட்ட சிசு : தாய் உட்பட மூன்று பெண்கள் கைது - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 21, 2025

தொப்புள் கொடியுடன் சடலமாக மீட்கப்பட்ட சிசு : தாய் உட்பட மூன்று பெண்கள் கைது

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் இருந்து தொப்புள் கொடியுடன் சிசுவின் சடலம் மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதடி பகுதியில் உள்ள தோட்ட கிணறு ஒன்றில் இருந்து தொப்புள் கொடியுடன் சிசு ஒன்றின் சடலம் நேற்று (21) மீட்கப்பட்டது.

தோட்டத்திற்கு சென்ற விவசாயிகள் கிணற்றினுள் சிசு ஒன்றின் சடலம் மிதப்பதாக அறிவித்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு, வைத்தியசாலையில் ஒப்படைத்ததோடு, தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில், குழந்தையை பிரசவித்த பெண் என சந்தேகிக்கப்படும் அப்பகுதியை சேர்ந்த 46 வயதான இரு பிள்ளைகளின் தாயை கைது செய்தனர்,

கைது செய்யப்பட்ட பெண்ணிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த பெண்ணின் தாய் மற்றும் இளைய சகோதரி ஆகியோரையும் கைது செய்துள்ளனர்

கைது செய்யப்பட்டுள்ள 3 பெண்களையும், சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

யாழ். விசேட நிருபர்

No comments:

Post a Comment