ரோஹிங்யா புகலிடக் கோரிக்கையாளர்கள் விவகாரம் : அதிகாரிகளுக்கு அழைப்பு அனுப்பியது நீதிமன்றம் - News View

About Us

About Us

Breaking

Thursday, January 16, 2025

ரோஹிங்யா புகலிடக் கோரிக்கையாளர்கள் விவகாரம் : அதிகாரிகளுக்கு அழைப்பு அனுப்பியது நீதிமன்றம்

மியன்மார் ரோஹிங்யா புக­லிடக் கோரிக்­கை­யா­ளர்கள் 116 பேர் தொடர்­பி­லான விவ­கா­ரத்தில், நேரில் மன்றில் ஆஜ­ராகி விளக்கமளிக்­கு­மாறு விமா­னப்­படை மற்றும் குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­கள சட்ட அதி­கா­ரி­க­ளுக்கு திரு­கோ­ண­மலை நீதிவான் நீதிமன்றம் அறி­வித்தல் அனுப்பியது. 

திரு­கோ­ண­மலை நீதிவான் ஜீவ­ரானி கருப்­பையா இதற்­கான உத்தரவை கடந்த 10 ஆம் திகதி பிறப்­பித்தார்.

முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் கடற்­ப­ரப்பில் வைத்து கடற் படையினரால் பொறுப்­பேற்­கப்­பட்டு, திரு­கோ­ண­ம­லைக்கு அழைத்துச் செல்­லப்­பட்டு திரு­கோ­ண­மலை நீதிவான் நீதி­மன்­றத்தில் ஆஜர்செய்­யப்­பட்ட 116 ரோஹிங்ய புக­லிடக் கோரிக்­கை­யா­ளர்கள் என கரு­தப்­ப­டுவோர், தற்­போது முல்லைத்தீவு கேப்­பா­பு­லவு விமானப்படை முகாமில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர். 

இந்த விடயம் குறித்த வழக்கு கடந்த 10 ஆம் திகதி திரு­கோ­ண­மலை நீதிவான் நீதி­மன்றில் விசா­ர­ணைக்கு வந்­தது.

இதன்­போது மன்றில் ஆஜ­ரா­கிய இந்த விடயம் குறித்து விசா­ரணை செய்யும் குற்றப் புல­னாய்வுத் திணைக்­கள அதி­காரி, இந்த புக­லிடக் கோரிக்­கை­யா­ளர்கள் குறித்த விடயம் தொடர்­பி­லான விசாரணைகள் நிறை­வ­டை­ய­வில்லை எனவும் விசா­ர­ணை­க­ளுக்கு மேலும் 14 நாட்­களை தரு­மாறும் கோரினார்.

இதன்­போது, ரோஹிங்யா புக­லிடக் கோரிக்­கை­யா­ள‌ர்­களின் நலன்களுக்­காக மன்றில் ஆஜ­ரா­கிய சட்­டத்­த­ரணி பிர­ஷாந்­தினி, அனீஸ் மொஹம்மட் ஷாஹில் உள்­ளிட்ட குழு­வினர், விமா­னப்­படை முகாமில் தடுத்து வக்­கப்­பட்­டுள்ள புக­லிடக் கோரிக்­கை­யா­ளர்­களை சந்­தித்து ஆலோ­ச­னை­களைப் பெற்­றுக் ­கொள்ள அனு­மதி மறுக்கப்படு­வது தொடர்பில் விட­யங்­களை முன்­வைக்க முனைந்தனர்.

இதன்­போதே நீதிவான் குற்றப் புல­னாய்வுத் திணைக்­க­ளத்­துக்கு விசா­ர­ணை­க­ளுக்கு அவ­கா­ச­ம­ளித்து, இந்த விடயம் தொட‌ர்பில் ஆராய விமா­னப்­படை, குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­கள சட்ட அதிகா­ரி­க­ளுக்கு அறி­வித்தல் அனுப்பி வழக்கை எதிர்­வரும் 31 ஆம் திக­திக்கு ஒத்தி வைத்தார்.

முன்­ன­தாக மன்­றுக்கு இடை­யீட்டு மனு ஊடாக விட­யங்­களை முன்வைத்­துள்ள விமா­னப்­படை, தொடர்ச்­சி­யாக ரோஹிங்ய அகதிகளை விமா­னப்­படை முகாமில் தங்க வைப்­பதால், அவர்­களை பார்­வை­யிட அரச சார்­பற்ற நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வந்து செல்ல நேரிடும் எனவும் அவ்வாறான நிலைமை விமானப்படை முகாமின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அது மாறலாம் எனவும் விடயங்களை முன்வைத்துள்ள‌தாக அறியமுடிகின்ற‌து.

Vidivelli

No comments:

Post a Comment