சம்பிக்க ரணவக்க மீதான வெளிநாட்டு பயணத் தடை நீக்கம் - News View

About Us

About Us

Breaking

Friday, January 10, 2025

சம்பிக்க ரணவக்க மீதான வெளிநாட்டு பயணத் தடை நீக்கம்

இராஜகிரிய பகுதியில் கடந்த 2016ஆம் ஆண்டு வீதி விபத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மீது விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடையை தற்காலிகமாக நீக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (10) அனுமதி அளித்துள்ளது.

இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, ​​பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் வழக்கறிஞர், தனது கட்சிக்காரர் தனிப்பட்ட விஷயத்திற்காக வெளிநாடு செல்ல வேண்டியிருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அதற்காக, இன்று முதல் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி வரை தற்போதைய வெளிநாட்டுப் பயணத் தடையை தற்காலிகமாக நீக்குவதற்கான உத்தரவைப் பிறப்பிக்குமாறு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தைக் கோரினர்.

இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், சம்பிக்க ரணவக்கவுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடையை தற்காலிகமாக நீக்கி, ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டது.

No comments:

Post a Comment