உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்துள்ளது.
அதற்கமைய, அந்த உத்தரவில் புதிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
கொரோன தொற்றுநோய் மற்றும் பிற சர்வதேச சுகாதார நெருக்கடிகளை உ லகளாவிய சுகாதார அமைப்பு தவறாகக் கையாண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி அந்த உத்தரவில் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையானது 12 மாதங்களில் ஐக்கிய நாடுகளின் சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகும் மற்றும் அதன் பணிக்கான அனைத்து நிதி பங்களிப்புகளையும் நிறுத்தும் என தெரிவித்தார்.
WHO இன் மிகப்பெரிய நிதி ஆதரவாளராக அமெரிக்கா உள்ளது, அதன் மொத்த நிதியில் 18% அமெரிக்காவினுடையதென்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக அமெரிக்காவிடம் இருந்து பெரும் பங்கு நிதியினை பெற்றுக்கொண்டு கொரோனா பெருந்தொற்று உள்ளிட்ட பல்வேறு பேரிடர்களை சரிவர கையாள உலக சுகாதார மையம் தவறிவிட்டதாக தனது தேர்தல் பிரசாரத்தின்போது தெரிவித்திருந்த நிலையில் தற்போது விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தனது முதல் ஆட்சியின் இறுதியிலும் இதே உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்திட்டு இருந்ததோடு, பின்னர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பைடன், தனது பதவிக்காலத்தின் முதல் நாளிலேயே அந்த முடிவை இரத்து செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment