A/L மாணவர்கள் பாடசாலையிலிருந்து தூரமாகும் காரணத்தை அறிய வேண்டும் : ஆண் பிள்ளைகள் கல்வி செயற்பாடுகளிலிருந்து விலகியிருப்பது அதிகரிப்பு - பிரதமர் ஹரினி அமரசூரிய - News View

About Us

Add+Banner

Thursday, January 2, 2025

demo-image

A/L மாணவர்கள் பாடசாலையிலிருந்து தூரமாகும் காரணத்தை அறிய வேண்டும் : ஆண் பிள்ளைகள் கல்வி செயற்பாடுகளிலிருந்து விலகியிருப்பது அதிகரிப்பு - பிரதமர் ஹரினி அமரசூரிய

472133299_1058086136360815_7166311946651414689_n
உயர் கல்வியைப் பெறும் பிள்ளைகள் பாடசாலையிலிருந்து தூரமாவது தொடர்பில் ஆராய்ந்து பார்க்க வேண்டுமெனவும், எந்தவொரு காரணங்களுக்காகவும் பிள்ளைகளுக்கான கல்விக்கான சந்தர்ப்பங்கள் தவிர்க்கப்படுவது நிறுத்தப்பட வேண்டுமெனவும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

மஹரகம தேசிய கல்வி நிறுவனத்திற்கு நேற்றைதினம் (31) கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டபோதே பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, தற்காலத்தில் பாடசாலைகளில் உயர்தர வகுப்புகளில் பிள்ளைகள் தொடர்ச்சியாக இருப்பது மிகவும் குறைவாகவே உள்ளது. விசேடமாக ஆண் பிள்ளைகள் கல்வி செயற்பாடுகளிலிருந்து விலகிச் செல்வது அதிகரித்துள்ளது.

எந்தவொரு சமூக, பொருளாதார காரணங்களை அடிப்படையாக கொண்டும் பிள்ளைகளுக்கான கல்வி சந்தர்ப்பங்கள் தவிர்க்கப்படுவதற்கு இடமளிக்கக்கூடாது. குழந்தை பருவ வளர்ச்சியிலிருந்து 13 வருட கால பாடசாலை கல்வி உட்பட உயர் கல்வியைத் தொடர்வதற்கான வாய்ப்புக்கள் அனைத்து பிள்ளைகளுக்கும் பகிரங்கமாக காணப்பட வேண்டும்.

தனி நபர் மற்றும் சமூக பரிணாமத்தை ஏற்படுத்துவதை கல்வியின் பிரதான இலக்காகக் கொள்வது மிக முக்கியமாகும்.
472140482_1058086143027481_7535824094497198706_n
மக்கள் கோரிய சமூக பரிணாமத்தை முன்னெடுப்பதற்கென பரிணாமமடைந்த கல்வி மாற்றத்தை மேற்கொள்வதன் ஊடாக இந்த நாட்டின் பிள்ளைகளுக்கு புதிய உலகில் கால் பதிப்பதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு எமது அரசு செயற்படுகிறது.

சமூகத்திற்கு பொறுப்புக்கூறும் பிரஜையை உருவாக்குவதற்கென கல்விக்காக ஒதுக்கப்படும் ஒவ்வொரு மூலதனத்தையும் நாட்டின் எதிர்கால முதலீடாகவே நாம் பார்க்கின்றோம்.

நீண்ட கால பிரதிபலன்களைக் கொண்டுள்ள இந்த உணர்வுபூர்வமான வேலைத்திட்டங்கள் குறித்து தேசிய கல்வி நிறுவனத்திற்கு விசேட பொறுப்புக்கள் காணப்படுவதாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

தேசிய கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் மஞ்சுலா விதானபத்திரண, பிரதி பணிப்பாளர் நாயகங்கள்;, பணிப்பாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
472007019_1058086256360803_6399892675683771831_n

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *