ரூ. 6 கோடி 63 இலட்சம் மதிப்புள்ள ‘குஷ்’ போதைப் பொருளை வெளிநாட்டிலுருந்து கடத்தி வந்து விமான நிலையத்திற்கு வெளியே கொண்டு செல்ல முயன்ற இரண்டு பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று (20) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகளால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்பாந்தோட்டை, கட்டுவான பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய சந்தேகநபர் கொஸ்கமவில் உள்ள சாலாவ இராணுவ முகாமில் பணியாற்றி வருகின்றமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மற்றைய சந்தேகநபரான 30 வயதுடைய பெண் அம்பாறை, மஹாஓயாவைச் சேர்ந்த, காப்புறுதி நிறுவனமொன்றில் பணியாற்றுபவர் என அடையாளம் காணப்பட்டள்ளார்.
சந்தேகநபர்கள் இருவரும் இன்று (20) மு.ப. 10.45 மணியளவில் தாய்லாந்தின் பெங்கொக்கிலிருந்து ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-403 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
அவர்கள் கொண்டு வந்த இரண்டு பயணப் பெட்டிகளில் 6.63 கி.கி. ‘குஷ்’ எனும் போதைப்பொருளை சூட்சுமமாக மறைத்து வைத்து கொண்டு வந்துள்ளனர்.
சந்தேகநபர்களை இன்றையதினம் (20) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தி, தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
(கட்டுநாயக்க ரி.கே.ஜி. கபில)
No comments:
Post a Comment