வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டது அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 4, 2024

வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டது அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம்

அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பான பிரேரணை இன்று (04) பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு இன்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பான விவாதம் நேற்று மு.ப. 9.30 மணி முதல் பி.ப. 5.30 வரை மற்றும் இன்று மு.ப. 9.30 முதல் பி.ப. 5.00 மணி வரை இரண்டு நாள் விவாதமாக இடம்பெற்றது.

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க கடந்த நவம்பர் மாதம் 21ஆம் திகதி அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment