இலங்கையின் கல்வி முறைமை மறுசீரமைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர் - News View

About Us

About Us

Breaking

Sunday, December 22, 2024

இலங்கையின் கல்வி முறைமை மறுசீரமைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர்

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவிற்கும், இலங்கைக்கான நோர்வே தூதுவர் May-Elin Stener இற்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று முன்தினம் (20) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

வறுமை ஒழிப்பு, சமூக பாதுகாப்பு நடவடிக்கைகள், வரி சீர்திருத்தங்கள், மீள்புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் வேலை வாய்ப்பு உருவாக்கம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.

இலங்கையின் கல்வி முறைமையை மறுசீரமைப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், மிகவும் பயனுள்ள மற்றும் வினைத்திறனான அரச சேவைக்காக நிர்வாக முறையை டிஜிட்டல் மயமாக்குவதற்கான அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகள் குறித்தும் வலியுறுத்தினார்.

இந்தச் சந்திப்பில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த மற்றும் வெளிவிவகார அமைச்சின் ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க பிரிவின் பணிப்பாளர் நாயகம் ஷோபினி குணசேகர மற்றும் நோர்வே தூதரக அதிகாரிகள் இலங்கை அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment