இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ YouTube சனல் 3ஆம் தரப்பின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுள்ளது. குறித்த சனலுக்குள் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
தற்போது குறித்த சனல் www.youtube.com/@Sri_Lanka_police பார்வைக்கு தவிர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நேற்று(30) இரவு 7.30 அளவில் இந்த சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனை விரைவில் மீட்டெடுக்க தேவையான பணிகளை தற்போது மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் திணைக்கள உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் விசேட அறிவிப்பு வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த சனல் தமது கட்டுப்பாட்டுக்குள் தற்போது இல்லையெனவும், அதில் வெளியிடப்படும் தகவல்கள் தொடர்பில் தாம் பொறுப்பில்லை எனத் பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, அரச அச்சக திணைக்கள இணையத்தளம் documents.gov.lk சைபர் தாக்குதலுக்குள்ளாகியுள்ளதோடு, அதிலுள்ள தகவல்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை கணனி அவசர பதிலளிப்பு குழுவினரான, தேசிய சைபர் பாதுகாப்பு நிலையம் (SLCERT) குறித்த இணையத்தளத்தை மீட்பதற்கான நடவடிக்கைகளை தற்போது முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment