ஐக்கிய தேசிய கட்சியின் நிலைமையே ஐக்கிய மக்கள் சக்திக்கும் ஏற்படும் - ஹிருணிகா பிரேமசந்திர - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 4, 2024

ஐக்கிய தேசிய கட்சியின் நிலைமையே ஐக்கிய மக்கள் சக்திக்கும் ஏற்படும் - ஹிருணிகா பிரேமசந்திர

(எம்.மனோசித்ரா)

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இளம் உறுப்பினர்களை ஓரங்கட்டியதோடு மாத்திரமின்றி, சஜித் பிரேமதாசவுக்கு தலைமைத்துவத்தை வழங்க மறுத்தார். அதன் காரணமாகவே ஐக்கிய தேசிய கட்சி இன்று முகவரியின்றிப் போயுள்ளது. எனவே அவ்வாறானதொரு நிலைமை ஐக்கிய மக்கள் சக்திக்கும் ஏற்பட்டு விடக்கூடாது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார்.

புதன்கிழமை (04) கொழும்பு - புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போது இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், பொதுத் தேர்தலின்போது ஒவ்வொரு கட்சிகளுக்கும் கிடைக்கும் தேசியப்பட்டியல் ஆசனங்களில் பெண்களுக்கும் வாய்ப்பளிக்குமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவிக்கும். அந்த வகையில் கட்சிகளும் செயற்படும்.

கடந்த பொதுத் தேர்தலில் டயனா கமகேவுக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் ஆசனம் வழங்கப்பட்டது.

இம்முறை எனக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று நான் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடமும், பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவிடமும் கோரியிருக்கின்றேன்.

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் மக்களுக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்திருக்கின்றேன்.

எதிர்க்கட்சியாக செயற்படுவதற்கான ஆணையை மக்கள் எமக்கு வழங்கியிருக்கின்றனர். எனவே அவர்களுக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டியது எமது பொறுப்பாகும். அதனை செய்வதற்கு நான் விரும்புகின்றேன்.

என்றும் மக்களுடன் இருக்க விரும்புகின்றேன். எனக்கொரு ஆசனத்தை வழங்குவது கட்சிக்கு இலாபமே தவிர, நஷ்டமல்ல.

அதேவேளை எம்மைப் போன்ற இளம் உறுப்பினர்களை ஓரங்கட்டினால் அது கட்சிக்கு சிறந்ததல்ல. அதற்கு சிறந்த உதாரணம் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க. 

அன்று சஜித் பிரேமதாசவுக்கு கட்சி தலைமைத்துவத்தை வழங்க மறுத்தார். இதனால் கட்சி பிளவடைந்தது. இன்று ஐக்கிய தேசிய கட்சி முகவரியற்றுள்ளது. எனவே அந்த நிலைமை ஐக்கிய மக்கள் சக்திக்கும் ஏற்பட்டு விடக் கூடாது என்றார்.

No comments:

Post a Comment