மஹிந்த ராஜபக்ஷவை படுகொலை செய்யவா பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது : சட்டத்தரணி மனோஜ் கமகே - News View

About Us

About Us

Breaking

Friday, December 13, 2024

மஹிந்த ராஜபக்ஷவை படுகொலை செய்யவா பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது : சட்டத்தரணி மனோஜ் கமகே

(இராஜதுரை ஹஷான்)

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கொலை செய்வதற்கு சாதகமான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகவா 116 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சேவையில் இருந்து மீளழைக்கப்பட்டுள்ளார்கள் என்ற சந்தேகம் எழுகிறது. அரசியல் பழிவாங்களுக்காகவே பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது என பொதுஜன பெரமுனவின் உறுபபினர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, நாட்டில் பல பிரச்சினைகள் காணப்படுகின்ற நிலையில் அப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பினை அரசாங்கம் சடுதியாக குறைத்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நிமித்தம் சேவையில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்களில் 116 பேர் சேவையில் இருந்து மீளழைக்கப்பட்டுள்ளனர்.

விடுதலைப் புலிகள் காலத்தில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக அமர்த்தப்பட்டிருந்தவர்கள் இவ்வாறு சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்கள்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் எண்ணக்கரு நாட்டில் இன்றும் காணப்படுகின்ற நிலையில் இவ்வாறு பாதுகாப்பினை குறைப்பது முறையற்றது.

மஹிந்த ராஜபக்ஷவை படுகொலை செய்வதற்காவா அவரது பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது என்ற சந்தேகம் எழுகிறது என்றார்.

No comments:

Post a Comment