யாழ்ப்பாணத்தில் இராணுவத்தின் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படும் - கடற்றொழில் அமைச்சர் - News View

About Us

About Us

Breaking

Sunday, December 15, 2024

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தின் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படும் - கடற்றொழில் அமைச்சர்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் காணப்படும் காணிகள் படிப்படியாக விடுவிக்கப்படும் என்று கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில், இராணுவத்தின் கட்டுப்பாட்டில் காணப்படும் 2624.29 ஏக்கர் நிலப்பரப்பு எதிர்வரும் காலங்களில் படிப்படியாக விடுவிக்கப்படும் என்று கடற்றொழில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரியவருவதாவது, தற்போது படையினரிடம் உள்ள காணிகள் 2025ஆம் ஆண்டு முதல் படிப்படியாக விடுவிக்கப்படும். அதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அத்துடன், யாழ். மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட மீள்குடியேற்றம் மற்றும் அபிவிருத்தி திட்டங்களுக்காக இந்த வருடம் 1303.42 மில்லியன் ரூபா நிதி செலவழிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

யாழ். நிருபர் ரமணன்













No comments:

Post a Comment