இலங்கை வரலாற்றின் மிக மோசமான விமான விபத்து : 191 உயிர்களை காவு கொண்ட அனர்த்தம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 4, 2024

இலங்கை வரலாற்றின் மிக மோசமான விமான விபத்து : 191 உயிர்களை காவு கொண்ட அனர்த்தம்

வரலாற்றில் மிகப்பெரிய விமான விபத்தாக கருதப்படும் மார்ட்டின் எயார் DC-8 55CF விமான விபத்து நடைபெற்று இன்றுடன் (04) 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

1974ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ஆம் திகதி இந்தோனேசியாவின் சுராபயாவிலிருந்து 182 ஹஜ் பயணிகளை ஏற்றிக் கொண்டு மக்கா நோக்கிச் சென்ற மார்டின் எயார் DC-8-55CF ரக பயணிகள் விமானம் ஒன்றே இரவு 10.10 க்கு இலங்கை - மஸ்கெலியா நோட்டன் பிரிட்ஜ் - தெப்பட்டன் பகுதியில், சப்த கன்னியா என அறியப்படும் ஏழு கன்னியர் மலையின் ஐந்தாவது குன்றின் மீது மோதி சிதறியது.

இதன்போது விமானிகள் உள்ளிட்ட 191 பேரும் அதே இடத்தில் பலியாகினர். இதனையடுத்து, விபத்தில் பலியான 190 பேர் தெப்பட்டன் தோட்ட கொத்தலென பகுதியிலேயே அடக்கம் செய்யப்பட்டனர்.

அடையாளம் காணக்கூடியவாறு இருந்த விமானப் பணிப் பெண்ணின் உடலை மட்டும் அவரின் காதலர் ஹெலிகொப்டர் மூலமாக இந்தோனேசியாவுக்கு கொண்டு சென்ற நெகிழ்ச்சியான சம்பவமும் இதில் அடங்கும்.

அத்தோடு, விபத்துக்குள்ளான விமான பாகங்களில் எஞ்சியிருக்கும் டயர்கள் இரண்டு மட்டும் இதுவரை பாதுகாக்கபட்டு வருகின்றது.

ஒரு டயர் நோட்டன் பொலிஸ் நிலையத்தில் உள்ளது. நல்ல நிலையிலிருக்கும் டயர் நோட்டன் விமலசுரேந்திதர அணைக்கட்டுக்கு செல்லும் வழியில் சம்பவங்ளை சுருக்கமாக தாங்கி பார்வைக்காக காட்சியப்படுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment