நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் (CID) முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாடானது இன்றையதினம் (22.11.2024) சமூக செயற்பாட்டாளர் எல்.எம்.ஏ.ஜி. அதிகாரி என்பவரால் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு நேற்றையதினம் (21) இடம்பெற்றபோது பேஸ்புக் நேரலை மூலமாக வைத்தியர் அர்ச்சுனா சர்ச்சைக்குரிய வார்த்தைப் பிரயோகங்களை முன்வைத்திருந்தார்.
இது குறித்து கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவில் அரகலய போராட்டத்தின் உறுப்பினர்களும் சுயார் சட்ட வல்லுநர்களும் முறைப்பாடொன்றை முன்வைத்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த முறைப்பாட்டாளர்கள், வைத்தியர் அர்ச்சுனாவின் செயலானது இலங்கை அரசியலமைப்புக்கும் சட்டத்துக்கும் முரணானது.
அர்ச்சுனாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாங்கள் குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டோம்.
இதுபோன்ற செயற்பாடுகள் பாராளுமன்றத்தில் கண்டிக்கப்பட வேண்டும். ஆகவே சபாநாயகர் உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம் என்றனர்.
No comments:
Post a Comment