கோத்தாபய ராஜபக்சவை பிரதிவாதியாக பெயரிட நீதிமன்றம் அனுமதி - News View

About Us

About Us

Breaking

Friday, November 1, 2024

கோத்தாபய ராஜபக்சவை பிரதிவாதியாக பெயரிட நீதிமன்றம் அனுமதி

ஸ்ரீலங்கா இஸ்­லா­மிய மாணவர் இயக்கம் தனக்கு எதி­ரான தடையை எதிர்த்து உயர் நீதி­மன்றில் தாக்கல் செய்­துள்ள அடிப்­படை உரிமை மீறல் மனுவின் பிர­தி­வா­தி­களில் ஒரு­வ­ராக முன்னாள் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­ப­க்ஷவை பெய­ரிட உயர் நீதி­மன்றம் அனுமதியளித்துள்­ளது.

1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்­க­ர­வாதத் தடுப்பு (தற்­கா­லிக ஏற்­பா­டுகள்) சட்­டத்தின் 27 ஆம் பிரிவின் கீழ் கடந்த ஏப்ரல் 13 ஆம் திகதி வெளி­யி­டப்­பட்ட 2223/3 ஆம் இலக்க வர்த்­த­மானி அறிவித்தலுக்கு அமைய 11 முஸ்லிம் அமைப்­புக்­க­ளுக்கு தடை விதிக்கப்­பட்­டது.

1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்­க­ர­வாதத் தடுப்பு (தற்­கா­லிக ஏற்­பா­டுகள்) சட்­டத்தின் 27 ஆம் பிரிவின் கீழ் 2021 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க ஒழுங்கு விதி­க­ளுக்­க­மைய குறிப்­பிட்ட 11 அமைப்­பு­களும் தடை செய்­யப்­பட்­டுள்­ள­தாக வர்த்­த­மானி அறி­வித்­தலில் சுட்டிக்காட்டப்­பட்­டுள்­ளது.

அதன் பின்னர் அவ்­வ­மைப்­புக்கள் பல உயர் நீதி­மன்றில் அடிப்­படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்த நிலையில், பின்னர் சில அமைப்புக்கல் மட்டும் தடை பட்­டி­யலில் இருந்து நீக்­கப்­பட்­டன.

எனினும் ஸ்ரீலங்கா இஸ்­லா­மிய மாணவர் இயக்கம் மீதான தடை தொடர்­கி­றது. 

அதன்­படி தம்­மீ­தான தடையை ஆட்­சே­பித்து ஸ்ரீலங்கா இஸ்­லா­மிய மாணவர் இயக்கம் தாக்கல் செய்த மனு பிர­தம நீதி­ய­ரசர் ஜயந்த ஜயசூ­ரிய, நீதி­ய­ர­சர்­க­ளான முர்து பெர்­ணான்டோ மற்றும் நீதி­ய­ரசர் மஹிந்த சம­ய­வர்­தன ஆகியோர் உள்­ள­டங்­கிய அமர்வு முன்னிலையில் பரி­சீ­லிக்­கப்­பட்­டது.

இதன்­போது மனு­தா­ரர்­க­ளுக்­காக சட்­டத்­த­ரணி சனேஷ் திஸாநாயக்கவின் அறி­வு­றுத்­தலின் பேரில் சட்­டத்­த­ர­ணி­க­ளான எம்.சி.எம்.முனீர், சல்மான் ரியால், பாரிஸ் சாலி, ரிஸ்வான் உவைஸ், கயானி பிர­தீபா, ஷில்பா ரவி­ஹன்சி, ஹுஸ்னா முஸம்மில் ஆகியோருடன் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி எம்.எம்.சுஹைர் ஆஜ­ராகி வாதிட்டார்.

முதலில் குறித்த மனுவில் பிர­தி­வா­தி­யாக முன்னாள் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­ப­க்ஷவை பெய­ரிட அவர் முன் வைத்த கோரிக்கையை நீதி­மன்றம் ஏற்­றுக்­கொண்­டது. இதற்கு அனுமதியளித்த நீதி­மன்றம் வழக்கை எதிர்­வரும் 2024 டிசம்பர் 6 ஆம் திக­திக்கு ஒத்தி வைத்­தது.

இதற்கு முன்னர் இம்­ம­னுவில் விஷேட வாதங்­களை முன் வைத்திருந்த‌ ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி சுஹைர், 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்­க­ர­வாதத் தடுப்பு (தற்­கா­லிக ஏற்­பா­டுகள்) சட்டத்தின் 27 ஆம் பிரிவின் கீழ் ஸ்ரீலங்கா இஸ்­லா­மிய மாணவர் இயக்கம் (எஸ்.எல்.ஐ.எஸ்.எம்.) மீது விதிக்­கப்­பட்­டுள்ள தடை சட்டத்துக்கு முர­ணா­னது எனவும், அப்­பி­ரிவின் கீழ் அமைப்பொன்றினை தடை செய்ய முடி­யாது எனவும் ஜனா­தி­பதி சட்டத்­த­ரணி எம்.எம். சுஹைர் தெரி­வித்­தி­ருந்தார்.

“அமைப்­பு­களை” தடை செய்யும் அதி­கா­ரத்தை பயங்­கர­வாத தடை சட்­டத்தின் கீழ் பாரா­ளு­மன்றம் தெளி­வாக ரத்து செய்­துள்­ளது. சட்டத்தின் 30 வது பிரிவின் மூலம் தடை­செய்யும் அதி­கா­ரத்தை பாராளு­மன்றம் நீக்­கி­யதைக் கருத்தில் கொண்டு, பிரிவு 27இல் உள்ள பயங்­க­ர­வாதத் தடைச் சட்­டத்தின் விதி­களின் கீழ் அப்­போ­தைய குடிய­ரசுத் தலை­வரால் வெளி­யி­டப்­பட்ட வர்த்­த­மானி விதி­மு­றைகள், பயங்­க­ர­வாதத் தடைச் சட்­டத்தின் கொள்­கைகள் மற்றும் விதிகளுக்கு முர­ணா­னது.

எந்­த­வொரு அதி­கா­ரமும் இன்றி இந்த ஒழுங்­கு­மு­றை­களை அமுல்படுத்தும் போது, ​​சட்­டமா அதி­பரை அப்­போ­தைய ஜனா­தி­பதி கலந்­தா­லோ­சிக்­காமல் இருந்­தி­ருக்­கலாம். தற்­போது அரசியலமைப்பின் 6வது திருத்­தத்தின் கீழ் இயற்­றப்­பட்ட அரசியலமைப்பின் 157ஆ உறுப்­புரை ஊடாக‌ மட்­டுமே அமைப்புகளை தடை செய்ய முடியும்.

ஸ்ரீலங்கா இஸ்­லா­மிய மாணவர் இயக்கம் என்­பது 40 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த பிரச்­ச­னையும் இன்றி செயல்­படும் மாணவர் அமைப்­பாகும். முக்­கி­ய­மாக க.பொ.த சாதா­ரண தர மற்றும் உயர்­தர மாண­வர்­க­ளுக்கு இஸ்­லா­மிய சூழலில் இல­வச வகுப்­பு­களை நடத்தி வரு­கி­றது. ஏப்ரல் 2019 ஈஸ்டர் தாக்­கு­த­லுக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஏப்ரல் 2021 இல் இந்த தவ­றான தடை விதிக்கப்­பட்­டது. அதன் ­பி­றகு அந்த அமைப்பு தனது தடை விதிக்கப்பட்டது.

அதன் பிறகு அந்த அமைப்பு தனது அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்தியுள்ளது. இது சமூகத்திற்கு சேவை செய்வதற்கான மாணவர் அமைப்பின் அடிப்படை உரிமைகளை மீறுறுவதுடன் கல்வியை தொடரும் முஸ்லிம் மாணவர்களைப் பாதிக்கிறது. என தெரிவித்திருந்த்தார்.

இம்மனு தொடர்பில் சட்டமா அதிபர் சார்பில் அரச சிரேஷ்ட சட்டவாதி இந்துனில் புஞ்சிஹேவா ஆஜரானார்.

Vidivelli

No comments:

Post a Comment