வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு/ வசதிகள்
2 Mercedes Benz, 1 Toyota Land Cruiser
மாதாந்தம் 1,950 லீற்றர் எரிபொருள்
3 சாரதிகள்
29 பொலிஸ் சாரதிகள் உள்ளிட்ட 180 பொலிஸ் அதிகாரிகள்
இராணுவ மற்றும் கடற்படை வீரர்களின் சேவை
ஓய்வு பெற்ற ஜனாதிபதிக்கான ஓய்வூதிய கொடுப்பனவு
கொழும்பு 7 விஜேராம உத்தியோகபூர்வ இல்லம்
செயலாளர் (ஒருவருக்கான) கொடுப்பனவு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் ஜனாதிபதி அலுவலகம் விளக்கமளித்துள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.
குறித்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இச்செய்திகள் அனைத்தும் பொய்யானவை என்றும் 1986 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க ஜனாதிபதிகளின் உரிமைச் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதி அலுவலகம் பின்வரும் பலன்களை அவருக்கு வழங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி அலுவலகம் தெரிவிக்கின்றது.
இதன்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஓய்வு பெற்ற ஜனாதிபதி ஒருவரின் ஓய்வூதியத்தை பெறுவதோடு, கொழும்பு 07, விஜேராம மாவத்தையில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தையும் செயலாளருக்கான கொடுப்பனவையும் அவர் பெபறுகின்றார்.
அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு 03 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், Mercedes Benz -600 May Batch (B/P) Car 2008, Toyota Land Cruiser – 2017, Mercedes Benz – G63 AMG 4×4, 2850 Jeep 2013 ஆகிய 3 வாகனங்கள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன.
அதற்காக மாதாந்த எரிபொருள் கொடுப்பனவாக 1950 லீற்றர் வழங்கப்படுவதுடன், அந்த வாகனங்களுக்காக மூன்று சாரதிகளும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் பாதுகாப்பு வழங்கப்படுகின்றது.
அதற்காக தற்போது சேவையில் ஈடுபட்டுள்ள இராணுவம் மற்றும் கடற்படை வீரர்களுக்கு மேலதிகமாக 29 பொலிஸ் சாரதிகள் உள்ளிட்ட 180 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் தொடர்பில் ஆராய்வதற்கு தற்போது அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் எதிர்காலத்தில் அது தொடர்பான தீர்மானங்கள் மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment