தேர்தல் முடிவினை வைத்து தமிழ் மக்களை கணிப்பிடாதீர்கள் : சீன தூதுவருக்கு பதிலளித்துள்ள யாழ். பல்கலை கலைப்பீட மாணவர் ஒன்றியம் - News View

About Us

About Us

Breaking

Saturday, November 30, 2024

தேர்தல் முடிவினை வைத்து தமிழ் மக்களை கணிப்பிடாதீர்கள் : சீன தூதுவருக்கு பதிலளித்துள்ள யாழ். பல்கலை கலைப்பீட மாணவர் ஒன்றியம்

நாடாளுமன்றத் தேர்தல் முடிவினை அடிப்படையாகக் கொண்டு தமிழ் மக்களின் தீர்வினை சீனா கணிப்பிட முடியாது என யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் மனோகரன் சோமபாலன் தெரிவித்தார்.

அண்மையில் யாழ். மாவட்டத்திற்கு வருகை தந்த சீன தூதுவர் தமிழ் மக்கள் மாற்றத்திற்கு வாக்களித்து தமது தீர்வு தொடர்பில் வெளிப்படுத்தியுள்ளனர் என தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், சீன தூதுவருக்கு சிறிய தெளிவுபடுத்தல் ஒன்றினை வழங்க விரும்புகின்றேன். தமிழ் மக்களை பொறுத்த வரையில் காணாமாலாக்கபட்டவர்களுக்கான தீர்வுகள் இன்னமும் கிடைக்கவில்லை. அரசியல் கைதிகள் இன்றுவரை விடுவிக்கப்படவில்லை. தமிழ் மக்களின் இனப் படுகொலை இன்றுவரை தொடர்ந்து வருகின்றது.

தமிழ் மக்கள் இன்றுவரை அரசியல் ரீதியாக ஒடுக்கப்பட்டு வருகின்றார்கள். அந்த அடக்குமுறையின் வீரியமும் வெளிப்படுகைகளும் மாறியிருக்கின்றன தவிர தமிழர் இன்றும் அடக்குமுறைக்கு உட்பட்ட இனமாகவே இருக்கின்றார்கள்.

இன்று வரை தமிழ் மக்கள் தேசிய இனமாகவே இருக்கிறார்கள். அண்மையில் இடம்பெற்ற தேர்தலை அடிப்படையாக வைத்துக் கொண்டு தமிழ் மக்களின் அரசியலை தீர்மானிப்பது எந்த வகையிலும் பொருத்தமற்றது.

வெறுமனே பாராளுமன்ற தேர்தல் மட்டும் தமிழ் மக்களின் அரசியல் அல்ல அதையும் தாண்டி உள்ளது. ஆகவே இது தொடர்பில் எங்களுடைய பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மிக தெளிவாக அதனை குறிப்பிட்டுள்ளது.

கலைப்பீட மாணவர் ஒன்றியம் என்ற வகையில் பெரும்பாலும் தமிழ் மக்களினுடைய நிலை என்ற வகையிலும் எந்த ஒரு நாடும் எமக்கு எதிரி நாடும் இல்லை நட்பு நாடும் இல்லை என்பது எங்களுடைய தத்துவமாக இருக்கின்றது. அதில் நாங்கள் நூறு விகிதம் தெளிவாக இருக்கின்றோம்.

தமிழ் மக்களினை பொறுத்தவரை தமிழ் மக்கள் திட்டமிடப்பட்ட இன அழிப்பிற்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றார்கள் . கட்டமைக்கப்பட்ட இனப் படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றார்கள்.

கட்டமைக்கப்பட்ட இனப் படுகொலைதான் இனப் படுகொலை என்பது வெறுமனே உயிர் ரீதியாக மாத்திரமன்றி பண்பாடு ரீதியாக பொருளாதாரரீதியாக மேற்கொள்ளப்படுவது ஆகும் என்றார்.

No comments:

Post a Comment