இசை நிகழ்ச்சிக்கு செலவு செய்த 10 இலட்சம் ரூபாவை மக்களுக்கு நிவாரணம் வழங்கியிருக்கலாமல்லவா? - ராஜித சேனாரத்ன - News View

About Us

About Us

Breaking

Saturday, November 30, 2024

இசை நிகழ்ச்சிக்கு செலவு செய்த 10 இலட்சம் ரூபாவை மக்களுக்கு நிவாரணம் வழங்கியிருக்கலாமல்லவா? - ராஜித சேனாரத்ன

(எம்.மனோசித்ரா)

அபா இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் 10 இலட்சம் ரூபாவை செலவிட்டுள்ளனர். அந்த 10 இலட்சம் ரூபாவில் வருமையிலுள்ள மக்களுக்கு நிவாரணங்களை வழங்கியிருக்கலாமல்லவா? முறைமை மாற்றத்தை ஏற்படுத்துவதாகக்கூறி ஆட்சியைக் கைப்பற்றியவர்களின் செயற்பாடுகள் இவ்வாறுதான் அமைந்துள்ளன என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை (29) கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசாங்கம் நாளுக்குநாள் வழங்கிய வாக்குறுதிகளுக்கு எதிராக செயற்பட்டு வருகிறது.

ஜே.வி.பி.யும் தேசிய மக்கள் சக்தியும் தம்மைத் தவிர ஏனைய அனைவரும் கள்வர்கள் என்பதையே மக்கள் மனதில் பதியச் செய்துள்ளனர். ஏனைய அரசியல்வாதிகள் அனைவரையும் கள்வர்களாக்கியுள்ளனர்.

ஆனால் இன்று அவர்கள் என்ன செய்கின்றனர்? 50000 ரூபா டிக்கட் பெற்று இசை நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். இவர்களது ஆட்சியைப் பார்க்கும்போது ரஷ்ய ஆட்சியே நினைவுக்கு வருகிறது.

அந்த இசை நிகழ்ச்சியில் ஒரு மேசைக்கு 5 இலட்சம் ரூபாவாகும். இவர்கள் 10 இலட்சத்துக்கு இரு மேசைகளை முன்பதிவு செய்திருக்கின்றனர். அந்த 10 இலட்சம் ரூபாவில் வருமையிலுள்ள மக்களுக்கு நிவாரணங்களை வழங்கியிருக்கலாமல்லவா?

பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் அதிசொகுசு வாகனங்களைப் பயன்படுத்துவதாகக் கூறினர். ஆனால் இன்று அவர்களும் அதே வாகனங்களையே பயன்படுத்துகின்றனர். நல்லாட்சி அரசாங்கத்தில் எவருக்கும் புதிய வாகனங்கள் வழங்கப்படவில்லை.

முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவதாகக் கூறியவர்கள் இதுவரை அதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை. தாம் பதவிகளை ஏற்றாலும் பேரூந்திலேயே பாராளுமன்றம் வருவோம் என்றும், வீட்டிலிருந்து உணவு கொண்டுவருவோம் என்றும் கூறியவர்கள் இன்று அதனை பின்பற்றுகின்றனரா? என்றார்.

No comments:

Post a Comment