சீரற்ற வானிலை பற்றி தமிழில் அறிவிக்கவும், உதவி பெறவும் இலக்கம் அறிமுகம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 27, 2024

சீரற்ற வானிலை பற்றி தமிழில் அறிவிக்கவும், உதவி பெறவும் இலக்கம் அறிமுகம்

சீரற்ற காலநிலையால் ஏற்பட்டுள்ள அவசர நிலைமைகள் தொடர்பில் தமிழில் தொடர்பாட பிரத்தியேகமாக தொலைபேசி இலக்கத்தை பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இதன்படி 107 என்ற இலக்கத்திற்கு தொடர்பினை மேற்கொண்டு தகவல்களை அறிவிக்கவும், உதவிகளை பெற்றுக் கொள்ளவும் முடியும்.

மேற்படி, இலக்கத்தின் ஊடாக சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் அவசரகால சூழ்நிலைகள், இடப்பெயர்வுகள் மற்றும் உதவிகள் தொடர்பில் அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும் நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஏற்படும் அனர்த்தங்கள் தொடர்பில் உடனடியாக அறிவிப்பதற்கு பொலிஸ் தலைமையகத்தில் 24 மணி நேர விசேட செயற்பாட்டு மையம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

சுகாதார நிலையங்கள், விபத்துக்கள் மற்றும் உதவி பொருட்கள் உள்ளிட்டவை தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கும் வகையில் இந்த சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.

அதன்படி, பின்வரும் தொலைபேசி எண்கள் மற்றும் மின் அஞ்சல் முகவரி மூலம் பொலிஸ் தலைமையகத்தை மக்கள் தொடர்பு கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொலைபேசி எண்
011-2027148, 011-2472757, 011 - 2430912 மற்றும் 011-2013051

மின்னஞ்சல் முகவரி
disaster.ops@police.gov.lk

No comments:

Post a Comment