இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரனை எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 25ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.
2015ஆம் ஆண்டு மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட பிணைமுறியில் அரசாங்கத்திற்கு ரூ. 10 பில்லியனுக்கும் அதிகமான நட்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய அவர் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள வழக்கு தொடர்பிலேயே அவருக்கு இவ்வாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் திலிண கமகே இன்று (26) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
குறித்த காலப்பகுதியில் இடம்பெற்ற இம்மோசடி தொடர்பில் அவர் ஏற்கனவே பல்வேறு வழக்குகளில் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள போதிலும், அவர் நாட்டை விட்டுத் தப்பிச் சென்று தலைமறைவாகி வாழ்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment