இலங்கையிலுள்ள இஸ்ரேலியர்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, October 24, 2024

இலங்கையிலுள்ள இஸ்ரேலியர்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அறிவிப்பு

இலங்கையிலுள்ள இஸ்ரேலியர்களுக்கு பொலிஸார் அறிவித்தலொன்றை விடுத்துள்ளனர்.

சுற்றுலாப் பயணிகளாகவோ, தனிப்பட்ட தேவைகளுக்காகவோ இலங்கைக்கு வந்துள்ள இஸ்ரேல் நாட்டவர்கள் தனது தனிப்பட்ட பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்ந்தால்

பின்வரும் தொலைபேசி இலக்கத்திற்கு நேரடியாகத் தொடர்புகொண்டு தேவையான உதவிகளைப் பெறலாம் என குறித்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0718592651 இலக்கத்தின் ஊடாக பொலிஸ் சுற்றுலா மற்றும் கடல் பிரிவிற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் தமயந்த விஜய ஸ்ரீயை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அவர் தேவையான நடவடிக்கைகளை எடுப்பார் எனவும், இதுபோன்ற விடயங்களில் உரிய நபர்களின் அடையாளத்தை சரிபார்க்க வேண்டியது அவசியம் என்பதால், தேவையான தகவல்களை வழங்குமாறு கேட்டுக் கொள்வதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவித்தலில் குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment