பார் பெர்மிட் பெற்ற அரசியல்வாதிகளை பகிரங்கப்படுத்தவும் : பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சலுகைகள் தேவையற்றது - சுமந்திரன் - News View

About Us

About Us

Breaking

Thursday, October 3, 2024

பார் பெர்மிட் பெற்ற அரசியல்வாதிகளை பகிரங்கப்படுத்தவும் : பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சலுகைகள் தேவையற்றது - சுமந்திரன்

கடந்த ஆட்சியில் மதுபானசாலைகளுக்கு பெர்மிட் பெற்று வழங்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகள் அனைவரது பெயர்களையும் தற்போதைய அரசு உடனடியாக பகிரங்கப்படுத்த வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் (03) புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே எம்.ஏ.சுமந்திரன் இதனை தெரிவித்தார். 

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “இன்று நாடு முழுவதிலும் மதுபான சர்ச்சை நிலவி வருகின்றது. இதனால் அந்தப் பட்டியலை அரசு உடனடியாக வெளிப்படுத்த வேண்டும். 

எந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லது அரசியல்வாதிகள் சிபார்சு செய்து, இவ்வாறு அதிகூடிய மதுபானசாலைகள் திறக்கப்பட்டுள்ளன என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அது தேர்தலுக்கு முன்பு தெரிய வந்தால்தான் அவ்வாறானவர்களை விலக்கி வைக்க முடியும். இது ஒரு சமூக விரோதச் செயற்பாடு.

இவ்வாறான நிலையிலும் மதுபானசாலைகளை அதிகரிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டவர்கள், இரகசியமாக ஈடுபட்டவர்கள் வெளிச்சத்துக்கு கொண்டுவரப்பட வேண்டும். அவர்களது பெயர்கள் வெளிவர வேண்டும். 

மேலும், பணத்துக்கு ஆதாயமாக்கியும் உள்ளனர், அதாவது அனுமதிப் பத்திரங்களை விற்றுள்ளனர் என்ற செய்தியும் கிடைத்துள்ளது. எனவே, அவர்கள் யார் என்பதை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும்.

பொருளாதார நெருக்கடி நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இத்தனை சலுகைகள் தேவையற்றது. அதிகமான சலுகைகளை குறைக்கின்றபோது நாம் முழுமையான ஆதரவை வழங்குவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக அவர் குறிப்பிடுகையில், புதிய இளம் முகங்களை அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும், குறிப்பாக பெண் வேட்பாளர்களை ஊக்குவிக்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment