அறுகம்பை பகுதியில் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 23, 2024

அறுகம்பை பகுதியில் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

அறுகம்பே சுற்றுலாப் பிரதேசத்தில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக சுமார் 500 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப்படை அதிகாரிகளை அனுப்பியுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அறுகம்பே மற்றும் பொத்துவில் பிரதேசங்களில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்து அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலுக்கமையவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, குறித்த பிரதேசத்தில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் அதிகமாக அலைச்சறுக்கு (Surfing) நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களுக்கு ஆபத்து நேரிடலாம் என தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.

இந்நிலையில், அந்த பிரதேசத்தில் பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பில் புலனாய்வுப் பிரிவினரும் ஏனைய பாதுகாப்பு நிறுவனங்களும் அவதானம் செலுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், கொழும்பில் அல்லது நாட்டின் வேறு எந்தப் பகுதியிலும் இதுவரையில் இவ்வாறான அச்சுறுத்தல்கள் தொடர்பில் புலனாய்வு அறிக்கைகள் எதுவும் கிடைக்கப் பெறவில்லை எனவும், பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment