களனி பல்கலைக்கழகத்துக்கு சொந்தமான கன்னங்கர மாணவர்கள் தங்கும் விடுதியில் இன்று (23) காலை மாணவர் ஒருவர், விடுதியின் உயர் மாடியில் இருந்து கீழே விழுந்த நிலையில், அவர் கிரிபத்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்து விட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களனி பல்கலைக்கழகத்தில் நான்காம் வருடத்தில் கல்வி கற்கும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மாணவன், கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்துகொண்டாரா? என்பது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment