இலங்கையில் உள்ள இஸ்ரேலிய பிரஜைகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக, சந்தேகத்தின் பேரில் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இச்சம்பவம் தொடர்பில் தற்போதுவரை கைது செய்யப்பட்ட மூவரும் உள்நாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதேவேளை அமெரிக்கப் பிரஜைகளுக்கு பயணத் தடை விதிக்க முன்னர், அமெரிக்க தூதுவர் இது குறித்து தன்னுடன் கலந்தாலோசித்த பின்னரே தீர்மானித்து அறிவித்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment