பெலியத்தையிலிருந்து கண்டிக்கு செல்லும் அதிவேக ரயிலில் வெடிபொருட்களுடன் கூடிய பை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இன்று (29) காலை 6.30 மணியளவில் பெலியத்தை நோக்கிச் சென்ற ரயில் பெலியத்த ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.
அதன் பின்னர் கண்டிக்கு புறப்படவிருந்த நிலையில், ரயிலை வழமைபோன்று பரிசோதிக்கும்போது, ரயில் பெட்டியின் இருக்கைக்கு அடியில் கறுப்புப் பையொன்றை ரயில்வே ஊழியர் ஒருவர் அவதானித்துள்ளார்.
இது தொடர்பில் பெலியத்த பிரதான புகையிரத நிலைய பொறுப்பதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து அங்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது குறித்த பையிலிருந்து துப்பாக்கியின் மகசீன் ஒன்றும் துப்பாக்கி தோட்டாக்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
இது தொடர்பில் பெலியத்த பொலிஸாருக்கு உடனடியாக தகவல் வழங்கப்பட்டுள்ளதுடன், பெலியத்த நிலையத்தில் ரயில் சோதனையிடப்பட்டது.
இதன் காரணமாக பெலியத்தயிலிருந்து கண்டி நோக்கிச் செல்லும் ரயில் தாமதமானது.
No comments:
Post a Comment