நீதியரசர் இமாம் தலைமையிலான விசாரணை அறிக்கையை திங்கட்கிழமை வெளியிடுவேன் : உதய கம்மன்பில - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 22, 2024

நீதியரசர் இமாம் தலைமையிலான விசாரணை அறிக்கையை திங்கட்கிழமை வெளியிடுவேன் : உதய கம்மன்பில

(இராஜதுரை ஹஷான்)

நீதியரசர் (ஓய்வுநிலை) இமாம் தலைமையிலான விசாரணை குழு ஜனாதிபதிக்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையை எதிர்வரும் திங்கட்கிழமை (28) நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்துவேன். பல உண்மைகளை நாட்டு மக்கள் தெரிந்துகொள்ள முடியும் என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

புறக்கோட்டையில் உள்ள பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அல்விஸ் அறிக்கையை பகிரங்கப்படுத்தி அந்த அறிக்கையின் உள்ளடக்கங்களை சுட்டிக்காட்டினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, குண்டுத் தாக்குதல் சம்பவத்தின்போது பொறுப்பற்ற வகையில் செயற்பட்ட குற்றப் புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட நீதியரசர் (ஓய்வுநிலை) அல்விஸ் விசாரணைக்குழு சமர்ப்பித்த அறிக்கையை நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்தியுள்ளேன்.

தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய விடயங்களை பகிரங்கப்படுத்தவில்லை. அறிக்கையை பகிரங்கப்படுத்த ஜனாதிபதிக்கு 7 நாட்கள் காலவகாசம் வழங்கினேன். அவர் அறிக்கைகளை பகிரங்கப்படுத்தவில்லை. ஆகவே நான் அறிக்கையை பகிரங்கப்படுத்தியுள்ளேன்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் செனல் -04 தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப்படம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட நீதியரசர் (ஓய்வுநிலை) இமாம் தலைமையிலான குழு அறிக்கை சமர்பித்துள்ளது. இந்த அறிக்கையை எதிர்வரும் திங்கட்கிழமை (28) பகிரங்கப்படுத்துவேன்.

அல்விஸ் மற்றும் இமாம் அறிக்கைகள் வெளியானதன் பின்னர் நாட்டு மக்கள் பல விடயங்களை அறிந்துக் கொள்ளலாம். அரசாங்கத்தின் நிலைப்பாடு எவ்வாறு இருக்கும் என்பதை எதிர்பார்த்துள்ளேன் என்றார்.

No comments:

Post a Comment