ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் மற்றும் பிரதமர் ஹரினி அமரசூரிய இருவருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் பிரதமர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக சிரேஷ்ட பேராசிரியர் கபில சேனவிரத்னவை நியமிப்பது தொடர்பில் எனக்கும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
பிரதமர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ கடிதத்தில், குறித்த அறிக்கை ஆதாரமற்றது மற்றும் தவறானது என்று விவரித்ததுடன் திருத்தமும் கோரியுள்ளது.
நேற்றைய (25ஆம் திகதி) நாளிதழின் நகரப் பதிப்பில் இடம்பெறும் திருத்தத்தை டெய்லி மிரர் ஆரம்பத்தில் திட்டமிட்டிருந்த போதிலும், அத்தகைய திருத்தம் எதுவும் வெளியிடப்படவில்லை.
இதையடுத்து, உடனடியாக திருத்தம் செய்ய வேண்டும் என பிரதமர் அலுவலகம் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது.
No comments:
Post a Comment