தபால் வாக்களிப்புக்கு 738,050 பேர் தகுதி : நிராகரிப்பு விண்ணப்பங்கள் 21,160 - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 22, 2024

தபால் வாக்களிப்புக்கு 738,050 பேர் தகுதி : நிராகரிப்பு விண்ணப்பங்கள் 21,160

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களில் அதிகளவான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பொதுத் தேர்தலுக்காக 7 இலட்சத்து 59,210 தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அவற்றில் 7 இலட்சத்து 38,050 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதுடன், 21 ஆயிரத்து 160 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.ஏ.எம்.எல். ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலுடன் ஒப்பிடுகையில் இத்தேர்தலில் 25,731 தபால் மூல வாக்குகள் அதிகரித்துள்ளன.

இம்மாதம் 23ஆம் திகதி தபால் மூல வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளதுடன், உத்தியோகபூர்வ வாக்கு அட்டைகள் விநியோகிக்கப்பதற்கு இம்மாதம் 26ஆம் திகதி திட்டமிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment