ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் அனர்த்தங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைக்கும் வகையில், நேற்று (19) முதல் விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் உதய ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதற்கான திட்டம் தேர்தல் ஆணைக்குழுவுடன் இணைந்து தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தேர்தல்கள் ஆணைக்குழு, அனர்த்த முகாமைத்துவ நிலையம், முப்படையினர், பொலிஸ் மற்றும் ஏனைய நிறுவனங்களின் ஒருங்கிணைப்புடன் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள விசேட தேர்தல் கூட்டு அனர்த்த செயற்பாட்டுப் பிரிவினூடாக இந்த விசேட வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படுகின்றது.
அதன்படி, அனர்த்த சூழ்நிலை காரணமாக தேர்தல் கடமைகள் அல்லது வாக்களிப்பதில் இடையூறுகள் ஏற்பட்டால், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் 117 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 0113668032, 0113668087 அல்லது 0113668025 ஆகிய விசேட அவசர தொலைபேசி இலக்கங்களுக்கும் அழைப்பினை முடியும்.
இந்த விசேட கூட்டு அவசரப் பிரிவு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 22 ஆம் திகதி வரை இயங்குமெனவும் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் உதய ஹேரத் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment