தேர்தல் முடிவுகளை பொது வெளியில் திரையிட தடை - News View

About Us

About Us

Breaking

Thursday, September 19, 2024

தேர்தல் முடிவுகளை பொது வெளியில் திரையிட தடை

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை பொது வெளியில் திரையிடுவது தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று வியாழக்கிழமை (19) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்தார். 

தேர்தல் முடிவுகளை பொது வெளியில் திரையிடுவதனால் வன்முறைச் சம்பவங்கள் ஏற்படலாம் எனவும் அவற்றை தடுக்கும் வகையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை பொதுமக்கள் தங்களது வீடுகளில் இருந்தவாறு தனிப்பட்ட முறையில் பார்வையிடுமாறும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment