இல்லங்களை மீளப் பெற உத்தரவு : மெய்ப் பாதுகாவலர்களும் மீள அழைப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, September 27, 2024

இல்லங்களை மீளப் பெற உத்தரவு : மெய்ப் பாதுகாவலர்களும் மீள அழைப்பு

முன்னாள் அமைச்சர்களுக்கு பயன்படுத்திய உத்தியோகபூர்வ குடியிருப்புகளைத் திரும்பப் பெறுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் தமது பதவிக் காலத்தில் பயன்படுத்திய அனைத்து அரச வீடுகளையும் ஒப்படைக்குமாறு பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.

பொதுத் தேர்தல் நடைபெறும் திகதி வரை முன்னாள் எம்.பி.க்கள் மாதிவெல குடியிருப்பைப் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளனர்.

மேலும், முன்னாள் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பல நிறுவனங்களுக்கு அரசாங்கம் வழங்கிய கொழும்பில் உள்ள அரசாங்க வீடுகளின் எண்ணிக்கை 50 ஆகும் எனவும குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, முன்னாள் சபாநாயகர், பிரதி சபாநாகர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரின் மெய்ப் பாதுகாவல்கள் தவிர, இதர முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நியமிக்கப்பட்டிருந்த மெய்ப் பாதுகாவலர்களை உடனடியாக அமுலுக்குவரும் வகையில் திரும்பப் பெற ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட தரப்பினரின் சகல சலுகைகளும் ரத்து செய்யப்பட்டு வருகிறது.

இதன்படி, பாராளுமன்ற கொடுப்பனவு, பணியாளர் கொடுப்பனவு, எரிபொருள் கொடுப்பனவு, முத்திரை கொடுப்பனவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment