கண்டி மாவட்டத்தில் அதிகரிக்கும் காச நோயாளர்கள் - News View

About Us

About Us

Breaking

Tuesday, August 27, 2024

கண்டி மாவட்டத்தில் அதிகரிக்கும் காச நோயாளர்கள்

கண்டி மாவட்டத்தில் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 50 காச நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கண்டி வைத்தியசாலையின் பிரதான வைத்திய அதிகாரி பசன் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், கண்டி மாவட்டத்தில் டெங்கு நோய் பரவக்கூடிய அபாயத்தை காட்டிலும் காச நோய் பரவக்கூடிய அபாயம் அதிகரித்துள்ளது.

காச நோய் என்பது ஒரு வகை பாக்டீரியா நோய்க் கிருமிகளால் ஏற்படும் ஒரு தொற்றுநோயாகும். இது உமிழ்நீர் மற்றும் சளி மூலமாக வேகமாக பரவக்கூடும்.

டெங்கு நோயாளர்களை 06 நாட்களுக்குள் அடையாளம் கண்டு சிகிச்சைக்காக அனுப்பி வைக்க முடியும். ஆனால் காசநோயாளர்களை 06 மாதங்களுக்குள் அடையாளம் காணுவது மிகவும் கடினமாகும்.

கண்டி நகரத்தை அண்மித்த பகுதிகளில் காசநோய் பரவக்கூடிய வாய்ப்பு அதிகம் காணப்படுவதால் பொது மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பது அவசியமாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment