நீர்கொழும்பு பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் முகநூலில் அறிமுகமான நண்பர்களுடன் இணைந்து போதைப் பொருள் விருந்து நடத்தியதாகக் கூறப்படும் 43 இளைஞர்கள் மற்றும் யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக மதுவரி திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மதுவரி திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தங்காலை, மாரவில, கிரிந்திவெல,ஹிங்குரக்கொட, பூகொடை, நீர்கொழும்பு, ஜா - எல மற்றும் ஹொரணை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 19 முதல் 35 வயதுக்குட்பட்டவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 10 யுவதிகளும், 33 இளைஞர்களும் அடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்களில் பல்கலைக்கழக மாணவர்களும், வர்த்தகர்களும் காணப்படுவதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து ஹெரோயின், கஞ்சா மற்றும் சிகரெட்டுகள் ஆகிய போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment